சென்னையில் போலீஸ் என கூறி வீடுகளில் கொள்ளையடித்த ஆறு பேர் கைது.. 60 சவரன் நகை பறிமுதல்
வீடுகளில் கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் போலீஸ் என கூறி வீடுகளில் கொள்ளையடிந்து வந்த மர்ம நபர்கள் ஆறு பேரை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 60 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் கடந்த 8ம் தேதி ஆனந்தன் என்பவது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது, தாங்கள் போலீஸ் எனவும் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் கூறி வீட்டை சோதனையிடுவது போல நாடகமாடினர். பின்னர் பீரோவில் இருந்த 50 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், காவல்துறையினர் சாலிகிராமம் பகுதியை சார்ந்த குரு என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தனது நண்பர்கள் விஜயராகவன், லஷ்மணன், கோகும் பிரசாத், மாரிமுத்து, செல்வா ஆகியோருடன் இணைந்து போலீஸ் அதிகாரி போல் நாடகமாடி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து குரு அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ஐந்து பேரையும் கைது செய்த ஆவடி காவல்துறையினர் அவர்களிடமிருந்து 60 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் ஆறு பேர் மீது வழக்கு பதில் செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications