இந்தியாவின் மீன் ஏற்றுமதிக்கு குந்தகம் விளைவிக்கும் இலங்கை சட்டம்... மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு
இலங்கை கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால் இந்திய மீன் ஏற்றுமதித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.10 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது இந்திய மீன் ஏற்றுமதிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் என்று கூறியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " இலங்கையின் சட்டத்தால் இந்தியாவின் மீன் ஏற்றுமதிக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்துள்ளது. எனவே, இலங்கை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து தொழில் செய்ய உரிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். " என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், " தரம் தாழ்ந்த விமர்சனங்களை முதலமைச்சரே பதிவு செய்திருப்பது சட்டமன்ற வரலாற்றில் கருப்பு அத்தியாயம். காவல்துறை மான்யம் மீதான பதிலால், முதல்வர்கள் பாதுகாத்த அரசியல் நாகரிகத்தை தூக்கியெறிந்துவிட்டார்" என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"அடிப்படை ஆதாரமின்றி விவாதத்தில் ஈடுபடுபவர்கள் தனிப்பட்ட தாக்குதலில் தான் முடிப்பார்கள். மேலும், மீனவர் பிரச்சனை, மாட்டிறைச்சி தடை, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றும் ஸ்டாலின் அந்தக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications