அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பொளேர்!
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த தப்பாத பிள்ளையாக செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த தப்பாத பிள்ளையாக செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை யார் அமைச்சர் எந்தத்துறைக்கு அமைச்சர் என்று தெரியாத நிலை இருந்து வந்தது. ஊடகங்களுக்கு பேட்டி என்றாலே மேயர் முதல் மினிஸ்டர் வரை அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தைரியமாக பேட்டி அளித்து வருகின்றனர். இன்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

தினகரன் கூட்டத்திற்கு அழைப்பு
அப்போது பல தடைகளைத் தாண்டி விரைவில் இரு அணிகளும் இணைந்து சிறப்பாகச் செயல்படுவோம் என்றார். தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய அவர், இதில் கலந்துகொள்வது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்றார்.

யாரும் குழப்ப முடியாது
தினகரன் மட்மின்றி யார் தங்களைப் பற்றி குறை கூறினாலும் அதனை முறியடித்து சிறப்பாகச் செயல்படுவோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது என்ற அவர் விரைவில் அதிமுக இணையும் என்றார்.

இரட்டை இலை சின்னத்துடன்
அதிமுக 3 அணிகளாக பிரிந்தாலும் எம்எல்ஏக்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்லவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். இரட்டை இலை சின்னத்துடன் விரைவில் மக்களை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். பத்திரிக்கையில் இடம்பெற
எம்ஜிஆர் மறைந்த போது ஏற்பட்ட சூழல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் பத்திரிகையில் இடம் பெறுவதற்காகவே அவரது தந்தையைப் போல அரசின் மீது குறைகளேப் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை
அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் உள்ளார் என்றும் செல்லூர் ராஜூ கூறினார். திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகள் கடனில் இயங்கியது, ஆனால் தற்போது வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

வழிதவறிச் செல்கிறார் கமல்
கமல் ஒரு நல்ல நடிகர் என்ற செல்லூர் ராஜூ தற்போது அவர் வழிதவறிச் செல்வதாக கூறினார். மேலும் அதனை கமல் மிக விரைவில் உணருவார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications