சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்
சேலம்: காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதி உதவியை சசிபெருமாளின் மனைவியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகில் உள்ள இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள்,59. இவர் கடந்த 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக்கடையை மூடக்கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சசிபெருமாள் இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்தனர். சசிபெருமாளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் சேலத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர்.
சசிபெருமாளின் கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றவில்லை என்றாலும், சேலம் மற்றும் மாவட்டம் முழுவதுமாவது மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிபெருமாளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் சசிபெருமாளின் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம், உடலை வாங்கி வந்து இறுதி சடங்கு செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். அவரது கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தனர்.
இதை ஏற்று 7 நாட்களுக்கு பின்னர் சசி பெருமாளின் உடலை வாங்கிக் கொண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு சேலம் புறப்பட்டனர். சசிபெருமாள் உடல் சரியாக இன்று மதியம் 12.15 மணியளவில், அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காடு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது வைக்கப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி
சசிபெருமாளின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கமியூனிஸ்டு மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் அஞ்சலி
சசிபெருமாள் உடலுக்கு தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சசிபெருமாள் மனைவி மகிளம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

போராட்டத்தில் மரணம்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சசிபெருமாள் தொடர்ந்து போராடி வந்தார். கடந்த 31ம்தேதி சசிபெருமாள் கன்னியாகுமரிக்கு சென்று, மதுக்கடைகளை மூடவலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். இதில் அவர் இறந்தார்.

8 நாட்களாக போராட்டம்
அதிகாரிகளும், போலீசாரும் சசிபெருமாளை தடுத்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சசிபெருமாள் இறந்துள்ளார். அவரது உடல் 8 நாட்களுக்கு பிறகு, இன்று எடுத்து வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்படுகிறது.

திமுக இரங்கல்
பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று, பல்வேறு கட்ட போராட்டங்களில் சசிபெருமாள் ஈடுபட்டார். என்தற்காகவே அவர் உயிரையும் இழந்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தி.மு.க.சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ரூ.10 லட்சம் நிதி உதவி
சசி பெருமாள் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி சசி பெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவியை அவரது மனைவியிடம் வழங்கினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications