ஓயாத போராட்ட எதிர்ப்பு அலை: தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா பெயர்ப் பலகையில் ஸ்டெர்லைட் பெயர் அழிப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் எம்ஜிஆர் பூங்காவில் ஸ்டெர்லைட் பெயர் தார் பூசி அழிக்கப்பட்டது.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் எம்ஜிஆர் பூங்கா பெயர்ப்பலகையில் இருந்த ஸ்டெர்லைட் நிறுவன பெயரை பொதுமக்கள் தார் பூசி அழித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு, சுவாசப் பிரச்னை ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் நீர் குடிக்கும் தன்மையை இழந்து வருகிறது என்றும் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் விளைநிலங்கள், மண்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கதறி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை 624 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் மக்கள் தொடர்ந்து 53 நாட்களாக போராடி வருகின்றனர். மரத்தடியில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு அரசியல் கட்சியினரும், மாணவ அமைப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா பெயர்ப்பலகையில் இருந்து ஸ்டெர்லைட் பெயரை சிலர் தார் பூசி அழித்துள்ளனர். இந்தப் பூங்காவை ஸ்டெர்லைட் நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஸ்டெர்லைட் என்ற பெயர் கூட தூத்துக்குடியில் எங்குமே இருக்கக் கூடாது என்று தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக பூங்காவைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து பெயர்ப்பலகைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவன பெயரை தார் பூசி அழித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications