வறட்சி எதிரொலி: கிடுகிடுவென விலையேறும் வைக்கோல் கட்டு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை குறைந்த நிலையில், வைக்கோல் கட்டு விலையேறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெல்லை: பருவமழை குறைந்த நிலையில், தங்கத்திற்கு ஈடாக வைக்கோல் கட்டு விலையேறுவதாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவண பற்றாக்குறை நிலவுகிறது.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மூலம் 86 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விவசாய நிலங்கள் பரப்பு வெகுவாக குறைந்து போய்விட்டது.
விவசாயம் நல்ல நிலையில் இருந்த காலத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.40 வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென் மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தள்ளாடி வருகின்றனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி விட்டன.
இந்த பிரச்சனையால் கால்நடை தொழிலுக்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்துக்கு சென்று விட்டதால் கால்நடைக்கு தீவனமும், தண்ணீரும் சரியாக கிடைக்காமல் உள்ளது.
வறட்சி தொடர்வதால் வைக்கோல் கட்டுகள் வெளிமாநிலத்தில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.300 முதல் ரூ.400 வரை தற்போது விற்கப்படுகிறது. இது அதிகமாக இருப்பினும் கால்நடைகளை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து விவசாயிகள் இதை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், இந்த நிலை நீடித்தால் அடுத்த வரும் ஆண்டுகளில் கால்நடைகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications