வறட்சி எதிரொலி: கிடுகிடுவென விலையேறும் வைக்கோல் கட்டு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை குறைந்த நிலையில், வைக்கோல் கட்டு விலையேறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெல்லை: பருவமழை குறைந்த நிலையில், தங்கத்திற்கு ஈடாக வைக்கோல் கட்டு விலையேறுவதாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவண பற்றாக்குறை நிலவுகிறது.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மூலம் 86 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விவசாய நிலங்கள் பரப்பு வெகுவாக குறைந்து போய்விட்டது.
விவசாயம் நல்ல நிலையில் இருந்த காலத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.40 வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென் மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தள்ளாடி வருகின்றனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி விட்டன.
இந்த பிரச்சனையால் கால்நடை தொழிலுக்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்துக்கு சென்று விட்டதால் கால்நடைக்கு தீவனமும், தண்ணீரும் சரியாக கிடைக்காமல் உள்ளது.
வறட்சி தொடர்வதால் வைக்கோல் கட்டுகள் வெளிமாநிலத்தில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.300 முதல் ரூ.400 வரை தற்போது விற்கப்படுகிறது. இது அதிகமாக இருப்பினும் கால்நடைகளை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து விவசாயிகள் இதை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், இந்த நிலை நீடித்தால் அடுத்த வரும் ஆண்டுகளில் கால்நடைகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications