தயாநிதி புகாரில் அர்த்தமே இல்லை.. சாமி; முடிஞ்சா கேஸ் போடுங்க.. குருமூர்த்தி சவால்!
சென்னை: தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக கொடுத்த வழக்கில் மூன்று பேர் கைதானது தொடர்பாக தயாநிதி அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கவுதமன் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.

சன்டிவியில் முறைகேடாக தொலைபேசி இணைப்பு பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளக் கூறி கைது செய்யப்பட்ட மூவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதாகவும், தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார்.
யாரையோ திருப்திப்படுத்த சி.பி.ஐ. இப்படி நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவியை திருப்திபடுத்தும் நோக்கில் சி.பி.ஐ. நடந்திருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் தயாநிதிமாறன்.
தயாந்திமாறன் விளக்கம் குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர், சிபிஐ வழக்கு பதிந்து கைது செய்யும்போது சம்பந்தப்பட்டோர் விளக்கம் தருவது இயல்பே. வழக்கில் இருந்து தீர்வு பெற நீதிமன்றத்தையே நாடவேண்டும். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமற்றது. மூவரும் துன்புறுத்தப்பட்டிருந்தால் மான நஷ்ட வழக்கு தொடரலாம்''என்று தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி சவால்
இதனிடையே தயாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி தரும் வகையில் கருத்து கூறியுள்ளார். இந்த வழக்கு தொடரப்பட்டது முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில்தான். இதில் எங்களை எப்படி அவர் குற்றம்சாட்ட முடியும். முடிந்தால் என்மீது வழக்கு தொடரட்டும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications