லேட்டாக புறப்படுவதாக கூறி முன்கூட்டியே புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்- 200 பயணிகள் அவதி
சென்னை: சென்னையிலிருந்து, டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நேர மாற்றம் குறித்து எழுந்த குளறுபடியால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி இல்லாமல், அந்த ரயில் சரியான நேரத்தில் அதாவது நேற்றிரவு 10 மணிக்கே புறப்பட்டு போய் விட்டது. ரயில் லேட்டாகும் என்று வந்த செய்தியால் 200 க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தாமதமாக வந்தனர். ஆனால் வந்து பார்த்தபிறகுதான் ரயில் புறப்பட்டுப் போயிருந்தது தெரிய வந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 5 மணி நேரம் தாமதமாக ஆதாவது இன்று காலை 3 மணிக்கு புறப்படும் என்று செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து நிலைய துணை மேலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, இன்று காலை 6.40 க்கு டெல்லி புறப்படும் துரந்தோ ரயிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் சென்னையில் ரயில் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications