மழைக்காலம் போயிருச்சு… அடிக்குது குளிரு… இனி வெயிலும் பட்டையை கிளப்புமாம்!!
சென்னை: வட கிழக்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிறைவடைந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகாலையிலும் இரவிலும் குளிர் காற்று அடித்தாலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியது. ஆண்டுதோறும் பெய்யும் இயல்பு மழையைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியினால் ஓரளவுக்கு மழை பெய்யும் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில் அதுவும் வலுவிழந்து போனது. இதனால் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை குறையத் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

மழை எவ்வளவு?
வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44.04 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு மாநிலத்தின் சராசரி மழை அளவு 43.03 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 91.56 செ.மீ. மழை சராசரியாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75.18 செ.மீ. மழைதான் பதிவானது.

மழைக்காலம் முடிந்தது
வடகிழக்கு பருவ மழை முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்றும் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிப்பொழிவு
இந்நிலையில் கடல் பரப்பிலும், வளி மண்டல மேல் அடுக்கிலும் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
கடல் பரப்பில் இருந்து தரை நோக்கி கடுங் குளிர் காற்று வீசுவதால் தரைப்பகுதியில் மூடுபனி நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இந்த மூடுபனி இருக்கிறது.

மூடுபனி
சூரிய உதயத்துக்கு பிறகு காலை 9 மணி வரையும் இந்த மூடுபனி நீடிப்பதால் வாகனங்கள் செல்வதில் பிரச்னை உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரவில் கடுங்குளிர்
தற்போது மழை முடிவுக்கு வந்த வறண்ட வானிலையே காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் கடல் பகுதியில் இருந்து தரை நோக்கி குளிர் காற்று வீசும். இரவில் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications