லஞ்சம்: கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழன் கைது! தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது வழக்கு!!
சென்னை: லஞ்சம் பெற்றதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். மனுநீதி சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக செட்டிநாடு குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கம்பெனிகள் பதிவுத் துறையின் பதிவாளராக இருப்பவர் மனுநீதிச் சோழன். பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியை அனைத்து செட்டிநாடு நிறுவனங்களில் இருந்தும் நீக்குவது என அவரது நிறுவனங்களின் ஆண்டு பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தமக்கு எதிரான இந்த பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் அனைத்துமே செல்லாது என்று சட்டப்பூர்வமாக அறிவிப்பதற்காக எம்.ஏ.எம். ராமசாமி, கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம். ராமசாமி கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுக்குழு முடிவுகளை செல்லாது என்று அறிவிப்பதற்காக ரூ10 லட்சத்தை லஞ்சமாக பெற்றிருக்கிறார் மனுநீதிச் சோழன்.
மனுநீதிச் சோழன் லஞ்சம் வாங்க இருக்கிறார் என்ற தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எம்.ஏ.எம். ராமசாமியிடம் மனுநீதிச் சோழன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
லஞ்சம் பெற்றதற்காக மனுநீதிச் சோழனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் லஞ்சம் கொடுத்ததாக செட்டிநாடு குழுமங்களின் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக எம்.ஏ.எம். ராமசாமியும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அவரது செட்டிநாடு அரண்மனைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி முன்னாள் ராஜ்யசபா எம்.பி. கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எம்.பியானவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து வருகிறார்.
அண்மையில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications