தமிழக அரசுக்கு கொள்ளையடிப்பதே கொள்கை - அன்புமணி ராமதாஸ் விளாசல்: வீடியோ

தமிழக அரசு கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமனி குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக அரசு மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் கொள்ளையடிக்கவே திட்டமிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அதை எதிர்த்துப் போராடும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு முன்பு 100 மணல் குவாரிகளை நடத்திக்கொண்டிருந்தது. அந்த மணல் மூலம் மொரிஷியஸ், மாலத் தீவு, கேரளா போன்ற இடங்களில் கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

 Tamilnadu government planned to open many sand quarries said Anbumani Ramdoss

அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சி வழக்குப் போட்டு 27 குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் 70 மணல் குவாரிகளை ஆரம்பிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மணல் குவாரிகள் ஆரம்பிக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடுவோம். தமிழக அரசும் ஆட்சியாளர்களும் கொள்ளையடிப்பதற்காகவே மணல் குவாரிகளை ஆரம்பிக்கின்றனர் என அரசை கடுமையாகச் சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+