காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தமிழக அரசு வரவேற்பு
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய தீர்ப்பில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா 2,000 கன அடிநீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.












Click it and Unblock the Notifications