For Quick Alerts
For Daily Alerts
தமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்
சென்னை : இந்தியாவின் முண்ணனி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், இன்று கடனில் தத்தளிப்பது கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் குறித்து இடம் பெற்றுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நிதிப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் நிலை கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!