எழிலகத்தில் சமைத்து சாப்பிட்டு போராடும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்
சென்னை எழிலகத்தில் சமைத்து சாப்பிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 7-ஆவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை கிளையும் கண்டனம் தெரிவித்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. மாறாக அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பெரிய அண்டாக்களில் சமையல் செய்து காட்சியை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications