அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.. தமிழக அரசு பதில் மனு
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது அவர்களது உரிமை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கான பதில் மனுவை இன்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என்று கூறியுள்ளது.

கட்டாயப்படுத்த முடியாது
மேலும் மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அரசு ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும்.

ஆசிரியர்களின் உரிமை
உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். என்றாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க உரிமையுள்ளது.

அரசுப் பள்ளியில் சேர்ப்பு
தற்போது பல ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயோமெட்ரிக் முறை
கடந்த 4 ஆண்டுகளில் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராத 910 ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications