ஹோட்டல்களுக்கு எமனாக மாறும் ஜிஎஸ்டி.. கையேந்தி பவன்களைத் தேடி ஓடும் மக்கள்!
ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
சென்னை: ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் சாலையோர கையேந்தி பவன்களில் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதன் மூலம் ஹோட்டல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஹோட்டல்களில் தவிர்ப்பு
18 சதவீத வரி என்பது மிக அதிகம் என கருதும் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். வேலை நிமித்தமாக சென்னை வரும் மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதில் சாலையோர கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

வார இறுதி நாட்களில்
வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஹோட்டல்களில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் சாலையோரா கடைகளில் பார்சல் வாங்கிச்செல்லும் வாடிக்கையை தொடங்கியுள்ளனர்.

புதிய உணவு வகைகள்
வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரிப்பால் சாலையோரக் கடைகளிலும் நாள்தோறும் புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஜிஎஸ்டி வரியால் பெரிய பெரிய பிராண்டட் ஹோட்டல்கள் வாடிக்கையாளர்ள் எண்ணிக்கை குறைந்து ஈ ஓட்டத் தொடங்கியுள்ளனர்.

களைக்கட்டும் கையேந்தி பவன்கள்
அதேநேரத்தில் கையேந்திபவன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. கடை திறந்த சிறிது நேரத்திலேயே உணவு வகைகள் தீர்ந்துவிடுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications