டெங்கு பலிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு... மத்திய மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!
டெங்கு இழப்பீடு குறித்து பதில் அளிக்க மத்திய மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: டெங்கு இழப்பீடு குறித்து பதில் அளிக்க மத்திய மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால், மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுக்கள், சுகாதார சீர்கேட்டால், இந்நோய்கள் ஏற்படுகின்றன.
குப்பை, கழிவுநீரை தேங்கவிடாமல் அகற்றி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மர்மக் காய்ச்சலால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் இறந்துள்ளனர். முறையான மருத்துவ உதவி கிடைக்காததால், இக்காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது.
டெங்கு, மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு எவ்வித உதவியும் அளிக்கவில்லை. டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் அக்டோபர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications