சென்னையை குளிர்விக்கும் வடகிழக்குப் பருவமழை.. எப்போது தொடங்கும்?
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவ மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவ மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. கடந்த கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
வறட்சியால் வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்திற்கு ஓரளவு கைகொடுத்துள்ளது.

தொடங்காத வடகிழக்குப் பருவமழை
இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி விவசாயிகளை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவமழை இதுவரை தொடங்காமல் உள்ளது.

தமிழகத்திற்கு 60 சதவீதம்
வழக்கமாக அக்டோபர், நவம்பர் டிசம்பர் என 3 மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யும். இதனால் தென்மேற்கு பருவமழையின் போது குறைந்த அளவு மழையை பெரும் தமிழகம், வடகிழக்குப் பருவமழையின் போது 60 சதவீதம் வரை மழையை பெறும்.

வடகிழக்குப் பருவமழை எப்போது?
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக பெய்யும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காற்றழுத்த தாழ்வு நிலை - வாய்ப்பு
இதனிடையே அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இது வடகிழக்கு பருவமழைக்கு ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications