வயது 44.. சிறைவாசம் 56 முறை.. மறுபடியும் 3 ஆண்டு சிறை.. திருந்தாத வெள்ளியங்கிரி!
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த வெள்ளியங்கிரிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை திருப்பூர் கோர்ட் விதித்துள்ளது. இது முக்கியமில்ல, 44 வயதுக்காரரான வெள்ளியங்கிரி இதுவரை 56 முறை சிறைக்குப் போய் திரும்பியவர் என்பதுதான் விசேஷமே.
மோட்டார் பைக் திருடிய வழக்கில் தற்போது 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார் வெள்ளியங்கிரி.

திருப்பூர், பல்லடம் சாலையில், அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நிறுத்தியிருந்த மொபட் சமீபத்தில் திருட்டு போனது. அதற்கு அடுத்த நாள் வீரபாண்டியில் குணசேகர் என்பவரின் பைக்கும் திருட்டுப் போனது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்லடம் சாலையில் வசித்து வரும் வெள்ளியங்கிரி (44) என்ற பழைய குற்றவாளி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்தான் பைக்குகளைத் திருடினார் என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு, திருப்பூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நடுவர் வேலுச்சாமி, வெள்ளியங்கிரிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வெள்ளியங்கிரிக்கு இதே வேலையாகும். பைக்குகளைத் திருடுவதை தொழிலாகவே வைத்திருந்தார். இவர் மீது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளனவாம். 56 சிறைக்குப் போய் திரும்பிய அவர் திருந்தாமல் தொடர்ந்து திருடனாகவே இருந்து வந்தார். தற்போது 57வது முறையாக சிறைக்குப் போயுள்ளார்.
சிறைக்குப் போய் திரும்பியதும், 100 வீடுகளில் திருடி சதம் போட்ட "ஸ்டைல் பாண்டி" போல இவரும் சீக்கிரமே 60வது முறையாக சிறைக்குப் போய் "மணி விழா" காண்பார் என நம்பலாம்.. விழாக் கொண்டாட அண்ணனின் "அடி விழுதுகள்" தயாராகட்டும்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications