"ஹேப்பி அடக்க ஒடுக்க நியூ இயர்.." - இளைஞர்களுக்கு தூத்துக்குடி போலீசாரின் எச்சரிக்கை இது
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு எஸ்பி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படைக்கு, மது அருந்துவோரை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதிவேகத்தை அளவிட்டு காட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றை உபயோகிப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி மகேந்திரன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடிபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவிகள், அதிவேகத்தை அளவிட்டு காட்டும் கருவிகளையும் எஸ்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை எஸ்பி மகேந்திரன் சந்தித்து பேசினார்.
புத்தாண்டு பிறப்பையொட்டி வருகிற 31ம் தேதி நள்ளிரவு, ஜனவரி 1ம் தேதி மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல்பயணிப்பவர்கள், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மேலும், தேவையற்ற கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சத்தமிடுதல், பெண்களை கேலி செய்தல், திறந்த வெளியில் மது அருந்துதல், சாலையில் பொது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இடையூறு செய்பவர்கள் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எஸ்.பி. தெரிவித்தார்.
முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக அதிகமான சத்தத்தில் வெடி வைத்தல், கூம்பு வடிவ ஓலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி.மகேந்திரன் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications