500 ரூபாய் கூலிக்கு ஒரு கொலை– கள்ளக்காதலுக்காக கணவனைக் கூலிப்படையால் கொன்ற மனைவி!
திட்டக்குடி: திட்டக்குடியில் வெறும் 500 ரூபாய் கூலிக்காக விவசாயி ஒருவரைக் கூலிப்படையினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்த விவசாயி தங்கராசு . இவரது மனைவி பரமேஸ்வரி . இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று தங்கராசு வீட்டு வராண்டாவிலும், பரமேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் வீட்டின் அறையிலும் தூங்கினர்.

கொலை செய்யப்பட்ட விவசாயி:
மறுநாள் காலையில் தங்கராசுவை யாரோ வெட்டி கொன்று விட்டதாக பரமேஸ்வரி அலறினார். இதையடுத்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலனால் கொலை:
இந்த கொலையில் பரமேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனை தனது கள்ளகாதலன் ரவிச்சந்திரன் உதவியோடு கூலிப்படை மூலம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அம்பலம்:
இதையடுத்து பரமேஸ்வரியும், அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண்ணாடத்தை சேர்ந்த கூலிப்படைத்தலைவன் சுவிட்லின் மூலம் தங்கராசுவை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து சுவிட்லின் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

கூலிப்படையினர் கைது:
இதில் சுவிட்லின் கூட்டாளிகளான 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த ரமேஷ் , கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த நரேஷ்குமார் , புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜி என்பது தெரிய வந்தது.

500 ரூபாய்க்கு ஒரு கொலை:
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது தங்கராசுவை கொல்ல கூலிப்படை தலைவனான சுவிட்லின் தங்களுக்கு தலா ரூபாய் 500 கொடுத்ததாகவும், பின்னர் மீதி பணத்தை தருவதாக கூறியதையடுத்து தங்கராசுவை அரிவாளால் வெட்டி கொன்றதாக தெரிவித்தனர்.

தேடுதல் வேட்டை:
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூலிப்படை தலைவன் சுவிட்லினை தேடி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications