சட்டசபை கூட்டம்: தமிழக அரசுக்கு ஆளுநர் புகழாரம்!- திமுக வெளிநடப்பு- விஜயகாந்த் வரவேயில்லை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டங்களை போக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவால்களை அரசு திறம்பட எதிர் கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்த அரசு உறுதிப்பூண்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் செய்து வருகிறது என்றும், தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றை முதல்வர் நீக்கியுள்ளதாகவும் ஆளுநர் பாராட்டினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்றும் கூறிய ஆளுநர், அந்தமான் படகு விபத்தின்போது மீட்புப்பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றார்.
திமுக வெளிநடப்பு
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உறுப்பினர்களும் அவையை வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். எதிர்கட்சிகள் மீது பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் போடப்படுவதாகவும் கூறினார். கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்று மக்கள் பிரச்சினையை பேசுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை:
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 3 வரை கூட்டம்
இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வெள்ளிக்கிழமை விவாதம் தொடங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. பிப்ரவரி 3-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் தனபால் இதனை அறிவித்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications