காவிரி வழக்கில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் என்ன?... சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை!
ஏப்ரல் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரஉள்ள காவிரி வழக்கில் தமிழக அரசு முன் வைக்க வேண்டிய வாதங்கள் பற்றி முதல்வர் சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் போது முன் வைக்க வேண்டிய வாதங்கள் பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி சட்ட வல்லுநர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஏப்ரல் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் என்னென்ன வாதங்கள் முன்வைக்க வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சட்ட வல்லுநர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கிறஞர்கள் பரமசிவம், விஜயகுமார் மற்றும் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழகம் சார்பில் நீதிமன்றத்தில் அழுத்தமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications