கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 562 மெகாவாட் மின் வினியோகம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், கியாஸ் மின் நிலையம், காற்றாலைகள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சாரம் பெறப்படுகிறது. இதில் காற்றாலைகள் மற்றும் புனல் மின் நிலையத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படும்.

அதே சமயம் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும். தற்போது குளிர்காலம் என்பதால் மின்தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் தேவை மற்றும் உற்பத்திக்கு இடையேயான வேறுபாடும் குறைந்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை தினமும் 562 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் கூடங்குளத்தில் இருந்து 2 ஆயிரத்து 248 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதனால் மத்திய மின்தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 3 ஆயிரத்து 395 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
காற்றாலைகளில் தற்போது 2 இலக்க எண்களில் தான் மின்சாரம் உற்பத்தியாகுகிறது. இதை கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தான் ஓரளவுக்கு ஈடு செய்கிறது என்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications