பா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது... தமிழக அரசு அறிவிப்பு!
2017ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2017ம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது, இதில் 2017ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 8 தமிழறிஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொடர்ந்து செயலாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதே போன்று 2017ம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியலை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதில் 2018ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் கோ. பெரியண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது டாக்டர் சகோ. ஜார்ஜ். கே ஜேக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா, காமரைஜர் விருதுகள் அறிவிப்பு
இதே போன்று அறிஞர் அண்ணா விருது அ. சுப்ரமணியனுக்கும், காமராஜர் விருது தா.ரா. தினகரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது முனைவர் பாலசுப்ரமணியனுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது முனைவர் மருத நாயகத்திற்கும் வழங்கப்படுகிறது.

பாலகுமாரனுக்கு திருவிக விருது
பாவேந்தர் பாரதிதாசன் விருது ஜீவபாரதிக்கும், திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விருதுகள் 9 தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வளர்மதிக்கு பெரியார் விருது
இந்த விருதுப் பட்டியலில் சிறப்பான அம்சம் என்னவென்றால் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ள பெரியார் விருது தான் அது. 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

50 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனவரி 16ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 1 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் தந்து சிறப்பிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் 50 பேர் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.2,500 உதவித் தொகையும் மருத்துவப்படியாக ரூ. 100 பெறுவதற்கான அரசாணைகள் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications