போலீசை ஏவி கதிராமங்கலத்தில் போராட்டத்தை நசுக்கும் அரசு.. புரட்சிகர இளைஞர் முன்னணி குற்றச்சாட்டு
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் மக்களின் போராட்டத்தைத் தமிழக அரசு போலீசாரை ஏவிவிட்டு ஒடுக்க நினைக்கிறது என்று புரட்சிகர இளைஞர் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது
சென்னை: கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி க்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை போலீசாரை ஏவி ஒடுக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் இன்று காலை 11 மணி அளவில், தாளமுத்து நடராசன் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், " கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசை ஏவி ரவுடித்தனம் செய்த தமிழக அரசை கண்டிக்கிறோம். கதிராமங்கலத்தில் இருந்து போலீசை உடனே வெளியேற்ற வேண்டும். போராடி கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
காவிரி உரிமையை மறுத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் திணித்து தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அழித்து, விவசாயப் பொருளாதாரத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டை அடிமைப்படுத்தும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டும். தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
போரட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications