போலீசை ஏவி கதிராமங்கலத்தில் போராட்டத்தை நசுக்கும் அரசு.. புரட்சிகர இளைஞர் முன்னணி குற்றச்சாட்டு
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் மக்களின் போராட்டத்தைத் தமிழக அரசு போலீசாரை ஏவிவிட்டு ஒடுக்க நினைக்கிறது என்று புரட்சிகர இளைஞர் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது
சென்னை: கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி க்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை போலீசாரை ஏவி ஒடுக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் இன்று காலை 11 மணி அளவில், தாளமுத்து நடராசன் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், " கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசை ஏவி ரவுடித்தனம் செய்த தமிழக அரசை கண்டிக்கிறோம். கதிராமங்கலத்தில் இருந்து போலீசை உடனே வெளியேற்ற வேண்டும். போராடி கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
காவிரி உரிமையை மறுத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் திணித்து தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அழித்து, விவசாயப் பொருளாதாரத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டை அடிமைப்படுத்தும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டும். தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
போரட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications