For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெற்று இனி சில நாட்களுக்கு தொடர் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெற்று இனி சில நாட்களுக்கு தொடர் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்து வருகிறது.

TN may face heavy rainfall due to Southwest Monsoon - Weather report

இந்த நிலையில் இன்றிலிருந்து இது தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இதுவும் இன்றிலிருந்து தீவிரமடையும்.

இனி தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று வீசும் திசையை பொறுத்து சமயங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிக உள்ளது .சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

English summary
Chennai and many places in TN may hit with Heavy rain as Southwest Monsoon getting strong says Weather Research Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X