இன்று இரவு லேசான மழை பெய்யும்.. தமிழகம் & புதுச்சேரி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் இன்று இரவு சென்னையிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையில் மாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க லேசான மழை பெய்யும். இரவிற்கு பின் சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். சில இடங்களில் கடல் லேசாக சீற்றமாக காணப்படும். இந்த வானிலை நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications