ஆர்.கே.நகர் தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை: தேர்தல் அதிகாரி
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி, வெங் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும், 29 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, பாஜக, மேட் பேரவை தீபா, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி, என் தேசம் என் உரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியன போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வடக்கு) பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் 3 பறக்கும் படை மற்றும் 3 நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 22 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் 2.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி, வெப் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1638 வாக்குச்சாவடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா குறித்து அதிக புகார்கள் வருகின்றன. அதுகுறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 29 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications