பொங்கலுக்கு எல்லா ரயிலும் “புல்” - சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த முன்பதிவு டிக்கெட்டுகள்
சென்னை: சென்னையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊரிலேயே பண்டிகையை கொண்டாட விரும்புவர். பயணம் செய்வதற்கு வசதியாக ரயில் பயணம் இருப்பதால் பெரும்பாலானோர் விரும்புவது ரயில் பயணத்தைத்தான்.

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 12 ஆம் தேதி ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆனால் எதிர்பார்த்த அளவு முன்பதிவு நடைபெறவில்லை. டிக்கெட் கவுண்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக இல்லை. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதிகபட்சமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,268 காலி இடங்கள் இருந்தன.
நேற்று ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல ரயில்களில் 2 ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முடிந்தது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 296 ஆகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 247 ஆகவும், அதிகபட்சமாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 317 ஆகவும் உள்ளன. குருவாயூர், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
நீலகிரி, ஏற்காடு, சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன. பெரும்பாலும் இரவில் புறப்படும் ரயில்களில் தான் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விட்டது. பகலில் புறப்படும் சில ரயில்களில் காலி இடங்கள் உள்ளன.
இன்று பொங்கலுக்கு முந்தைய தினமான 14 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்குகிறது. ஏராளமானோர் தங்களது வீட்டில் இருந்த படியும், அலுவலகங்களில் இருந்த படியும் ஆன் லைனில் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகமாக வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய வந்த ஒரு சிலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications