ஜெ. மரணம் பற்றி விசாரணை கமிஷன்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெ. மரணத்தில் என்ன சந்தேகம் உள்ளது? இத்தனை மாதங்கள் கழித்து எதற்காக விசாரணை கமிஷன்?. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க தேவையில்லை.

விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், மற்றும் பல டாக்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிவரும்.
இந்த விசாரணை கமிஷனையும் ஓ.பி.எஸ் தரப்பு ஏற்கவில்லை என்பதில் இருந்து எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணையப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ் தரப்பு சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications