2 சிறுமிகள் பலியானதற்கு அரசின் அலட்சியமே காரணம் - டிடிவி தினகரன் பொளேர்
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலி.... அரசின் அலட்சியமே காரணம் என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : கொடுங்கையூரில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் சிறுமிகள் இருவர் மின்சாரம் தாக்கி பலியாகினர். அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் எம்.ஜி.ஆர் நகரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மிதித்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பலியான சிறுமிகள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மின் கம்பி அறுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததன் அலட்சியத்தாலேயே சிறுமிகள் பலியாகி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
|
ட்விட்டரில் தினகரன் பதிவு
இந்த சம்பவம் குறித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
|
மனவேதனை
அதில், நாம் ஏற்கனவே அச்சப்பட்டது போல எடப்பாடி அரசின் அலட்சியத்தால் கொடுங்கையூரில் சிறுமிகள் இருவர் பலியாகி இருப்பது அறிந்து மனவேதனை அடைந்தேன்.
|
குடும்பத்தினருக்கு இரங்கல்
சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தினகரன்.
|
நடவடிக்கை தேவை
இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications