எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்காதீங்க.. தினகரனைப் பார்த்துக் கத்துக்கங்க..!
வருமான வரித்துறை சோதனையால் சசிகலா குடும்பமே வௌவௌத்துப் போயிருக்கும் நிலையிலும் டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தினத்திற்காக வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தில் நடந்த வருமான வரி சோதனையால் அவரது குடும்பத்தினர் தலை கிறுகிறுத்து போயிருக்கும் நிலையில் டிடிவி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூலாக குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
கடந்த 9ம் தேதி சசிகலா குடும்பத்தை குறி வைத்து தமிழகத்தில் நடத்தப்பட்ட "ஸ்ரீனி வெட்ஸ் மகி" வருமானவரியின் ரெய்டு கடந்த 5 நாட்களாக களைகட்டியது. ஒரு வழியாக நேற்று மாலையுடன் இந்த திருமண ஏற்பாட்டிற்கு சுபம் கார்டு போடப்பட்டது. சோதனை முடிந்தாலும் ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ள அதிகாரிகள் சசிகலா குடும்பத்தினர், உதவியாளர்கள், தொழிலதிபர்கள் என்று சுமார் 355 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வருமான வரி சோதனை நடந்த முதல்நாளே கூலாகத் தான் இருந்தார் தினகரன். தனது வீட்டிற்கு வருமான வரி அதிகாரி வந்து சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்தார்.

கூலாக இருந்த தினகரன்
அதோடு தொடர்ந்து 5 நாட்களாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்து வந்தார். எவ்வளவு வேண்டுமானாலும் சோதனை நடத்தட்டும், அதற்கு உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் தருவார்கள்.

குற்றச்சாட்டு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான கார் நிறுவனத்திடம் இருந்தே வருமான வரி சோதனைக்கான அனைத்து கார்களும் புக் செய்யப்பட்டிருக்கின்றன என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தினகரன் முன் வைத்தார்.

கிறுகிறுத்த சசி குடும்பம்
5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை கடைசியில் விவேக், கிருஷ்ணப்ரியா வீட்டில் மட்டும் நடந்தது. இதனால் தினகரன் கடந்த 2 நாட்களாகவே தெம்பிழந்து தான் காணப்பட்டார் என்று சொல்ல வேண்டும்.
|
தினகரன் வாழ்த்து
சுழன்றடித்த வருமான வரி சோதனையால் சசிகலா குடும்பமே கிறுகிறுத்து தான் உள்ளது. ஆனால் இத்தனை தணகளத்திலும் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் இன்றைய சூழ்நிலையில், உண்மை எது, பொய் எது என்பதை குழந்தைகள் பிரித்துணர்ந்து செயலாற்றிட பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழி நடத்திட வேண்டும். குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications