அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை: 11 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை
சென்னை: அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது. அப்போது 11 தொகுதிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி அமைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவின் நிலை தெரியாமல் இருந்தது. அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுமா, தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த 13-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி.கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிமுகவின் ஐவர் அணி நால்வர் அணியாக மாற்றப்பட்டுள்ளதால் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் வேல்முருகனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார்.
மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு சாதகமான 11 தொகுதிகளையும் தேர்வு செய்து, அந்தப் பட்டியலையும் அதிமுகவினரிடம் கொடுத்துள்ளார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications