பணமதிப்பிழப்பு : ஏடிஎம் க்யூ படத்தை வெளியிட்ட நாசா... நெட்டிசன்கள் குறும்பு
பணமதிப்பிழப்பால் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்தித்தனர் என்பது குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பணமதிப்பிழப்பால் இந்த ஓராண்டில் மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய தினத்தில் மக்களின் மனநிலை குறித்தும், கடந்த ஆண்டு நடவடிக்கையின்போது அவர்களின் நிலை குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
ஏடிஎம் வாசலில்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏடிஎம் வாயிலில் நின்றதாக இந்த வலைஞர் தெரிவிக்கிறார்.
|
செயல்படுத்தல்
பணமதிப்பிழப்பை கொண்டு வர இப்படி திட்டமிட்ட நிலையில் அது இவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்கிறார் இந்த வலைஞர்.
|
கருப்பு பணத்தை ஒழிப்பது
பணமதிப்பிழப்பு கருப்பு பணத்தை எப்படி தடுத்தது தெரியுமா என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
நன்றி மத்திய அரசு
பணமதிப்பிழப்புக்கு பிறகு என் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்கள் இருக்கும் ஏரியாக்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
|
இந்தியாவின் நாசா படம்
வங்கி ஏடிஎம்களில் மக்கள் நின்றிருப்பது போன்ற படத்தை நாசா அண்மையில் வெளியிட்டுள்ளதாக கூறுகிறார் இந்த வலைஞர்.
|
ஏடிஎம் மையங்களில்...
வாள் ஏந்திக்கொண்டு வந்தீங்க வெட்டிருவேன் என்பது போல ஏடிஎம் மையங்களில் இருந்த காவலர்கள் இவ்வாறே செயல்பட்டனர் என்று வீடியோ போட்டுள்ளார் ஒருவர்.