இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னரே உள்ளாட்சி தேர்தல்... அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்புதான் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான உத்தேச காலஅட்டவணையை ஜூலை 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல்ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்தை பெற்றதும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தினால் அதிமுக ஜெயிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே வேறு சின்னத்தில் நின்றால் ஒரு ஓட்டு கூட தேறாது என்பதை என்பதை இப்படியா வெளிப்படையாக அமைச்சர் ஒத்துக்கொள்வது என்று கேட்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications