கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதா.. தடுத்து நிறுத்துவோம்.. வைகோ ஆவேசம்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அணைக் கட்டுவதை எதிர்த்து போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.
சித்தூர் சீதலகுப்பத்தில் தடுப்பணைக்கான கட்டுமான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளுக்காக மணல், ஜல்லி கற்கள் ஆகியவற்றை அம்மாநில அரசு கொட்டி வைத்துள்ளது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சீதலகுப்பத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விரைவில் போராட்டம்
ஆந்திர மாநில அரசின் இந்த நடவடிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, விரைவில் ஆந்திரா அரசின் இந்தச் செயலை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

தடுத்த நிறுத்த..
மேலும், ஆந்திர அரசின் தடுப்பணைக் கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான முயற்சிகளை விரைவில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பஞ்ச பிரதேசம்
அதே போன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை தமிழகத்தின் பஞ்ச பிரதேசமாக மாறும் நிலை உருவாகியுள்ளது என்று வைகோ கவலை தெரிவித்தார்.

விபரீத விளைவு
மாடு விற்பனைக்கான தடை என்பது மத்திய அரசு மக்களுக்கு செய்துள்ள அநீதியாகும். மத்திய அரசின் இந்த உத்தரவால் விபரீதம் விளைவுகள் ஏற்படும் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications