முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த பாஜக வானதி சீனிவாசன் - அணைகளை தூர் வார கோரிக்கை
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். அணைகளை தூர்வார கோரிக்கை வைத்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். அப்போது அணைகளை தூர்வாரவும், அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் அவினாசி அத்திக்கடவு திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாநிலத்தில் இருந்த எந்த பாஜக தலைவர்களும் இது தொடர்பாக முதல்வரை சந்தித்ததும் இல்லை, பேசியதும் கிடையாது.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பின்னர் மாநில பாஜக தலைவர்கள் பல கோஷ்டிகளாக பிரிந்து பேட்டி தருகின்றனர். பொன். ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில் அதிமுக அழிந்து விடும் என்று கூறுவார்.
அதே நேரத்தில் மாநில தலைவர் தமிழிசையோ, தமிழகத்திற்கு விரைவில் பொது தேர்தல் நடைபெறும் என்று பேட்டி கொடுப்பார். இதுநாள் வரை அமைதி காத்து வந்த வானதி சீனிவாசனோ, முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கவும், அணைகளை தூர்வாரவும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தினோம். சிறுவாணி அணை வறண்டு விட்டது, முதல்வர் அறிவித்துள்ள குடி மராமத்து திட்டத்தின் மூலம் அணைகளை தூர்வார கோரிக்கை வைத்துள்ளோம். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications