பீகார் குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி... மோடியின் சென்னை கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு
சென்னை: பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னையில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை, வண்டலூரில் வரும் 8ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக மோடியின் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் பிரதமர் என்பவர் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். ஆனால், இந்த தேர்வுக்கு முன்னதாகவே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று அறிவித்துக் கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இவர், பீகாரில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டது. சென்னையில் மோடி கலந்து கொள்ளும் வண்டலூர் பகுதியும் பதற்றமான பகுதி. போக்குவரத்து நிறைந்த பகுதி. தேசிய நெடுஞ்சாலையையொட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால் சமூக மோதலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்.
எனவே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இத்தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications