நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை- போலீஸ் குவிப்பு
நெல்ல:நெல்லை மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர இளைஞரணி அமைப்பாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தார்.

ஜெயமோகன் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் ஞாயிறன்று இரவு 8 மணி அளவில் ஜெயமோகன் பங்களப்பா தெருவில் உள்ள சலூன் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அரிவாளுடன் அங்கு வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சராமரியாக வெட்டினர். பின்னர் இருவரும் அரிவாளை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடினர்.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த ஜெயமோகனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் ஜெயமோகனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
பாளையம்கோட்டை உதவி கமிஷனர் மாதவன் நாயர், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கொலை நடந்த இடம் அருகே இருந்த சலுன் கடை உரி்மையாளர் சுடலை என்பவரை போலீஸ் ஜுப்பில் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தந்தை ஜீப் முன் படுத்து மறித்தார்.
இதையடுத்து போலீசார தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications