எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு: வேல்முருகன் இரங்கல்
சென்னை: சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபரான தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கை:
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபரான தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் அவர்கள் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழர் வம்சாவளியினரான செல்லப்பன்-அபிராமியம்மன் தம்பதியினருக்கு 1924-ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஆர். நாதன். சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு நெருக்கமாக இருந்தவர் எஸ்.ஆர். நாதன்.
சிங்கப்பூர் அதிபர் பதவியை வகிப்பதற்கு முன்னதாக அந்நாட்டு அரசு உயர் அதிகாரியாக பணியாற்றினார். பாதுகாப்பு, உளவு, வெளியுறவு போன்ற துறைகளிலும் பணியாற்றி உள்ளார். 1988-ம் ஆண்டு மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், 1990-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டுவரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் எஸ்.ஆர். நாதன் பணியாற்றினார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்துள்ளார். சிங்கப்பூர் அதிபராக 1999-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை எஸ்.ஆர். நாதன் பதவி வகித்தார். 2 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்.ஆர். நாதன்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் பிரவாசி பாரதிய சம்மான் விருது 2012-ம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு சிங்கப்பூர் மிகப்பெரிய பொருளியல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, முதன்முறையாக அரசாங்க இருப்பு நிதியிலிருந்து 4.9 பில்லியன் வெள்ளியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியவர். தமது பதவிக்காலத்தில் அவர் உருவாக்கிய அதிபர் சவால் அறநிதி அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பல மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டு வசதி குறைந்தோருக்கு வழங்கப்பட்டது.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஆர். நாதன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. சிங்கப்பூரில் தமிழர்களின் முகமாக திகழ்ந்த எஸ்.ஆர். நாதனின் மறைவு என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு.
எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தம்முடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications