கேரளாவின் புது அணை ஆய்வுக்கு அனுமதி தருவதா.. மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையில் கேரளா புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக 35 ஆண்டுகாலம் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி தற்போதுதான் தமிழ்நாடு தனக்கான நீதியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வயிற்றில் அடிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை அருகேயே கேரளா மற்றொரு அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அடாவடியாக அறிவித்தது. தற்போது கேரளா முன்வைத்த புதிய அணைக்கான் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.
தற்போதைய அணை மிகவும் பலமாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் மத்திய அரசு கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமாகும். தமிழ்நாட்டு மக்களின் அத்தனை வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் கள்ள மவுனமாக இருப்பது அல்லது பச்சைத் துரோகம் இழைப்பது என்பதுதான் எந்த மத்திய அரசாக இருந்தாலும் கடைபிடிக்கிற கொள்கையாக இருக்கிறது. அதுவே தற்போதும் நீடிக்கிறது.
இந்தியப் பேரரசின் தொடரும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என்பதை வரலாறு பார்க்கத்தான் போகிறது. கேரளாவின் அடிப்படையில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.. இல்லையெனில் மிகக் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
தமிழக முதல்வர் அவர்களும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும்
வலியுறுத்துகிறேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications