லிங்காவுக்கு குவிகிறது கூட்டம்.. அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை!- டி சிவா அறிக்கை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்துக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் குவிகிறார்கள். இந்த நேரத்தில் படம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா எச்சரித்துள்ளார்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் வெளியான லிங்கா படம் பெரும் வசூலைக் குவித்து வருகிறது.

ஆனால் சிலர் வேண்டுமென்றே படத்துக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர். படத்தில் நேரடியாக சம்பந்தப்படாத இவர்கள், தாங்கள்தான் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து லிங்காவை வாங்கியதாகக் கூறி வருகின்றனர். ஆனால் விசாரிக்கையில் சில மீடியேட்டர்கள் (சினிமா புரோக்கர்கள்) திட்டமிட்டு இந்த மாதிரி பொய்யை கட்டவிழ்த்துள்ளது தெரிய வந்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் லிங்கா தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்.
இந்த நிலையில் படத்தின் தமிழகம் மற்றும் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவீஸ், இதுபோன்ற போலி ஆசாமிகளின் புகார்கள் மற்றும் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை:

கடந்த இரண்டு நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான விபரங்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள்.
லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டுத் தேர்வு நடப்பதாலும், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600 அரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டதாலும், எதிர்ப்பார்த்ததை விட சற்று வசூல் குறைந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகின்றன. இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.
லிங்கா மக்களுக்குப் பிடித்த படம். விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றிய எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது.

மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு தயாரிப்பாளர் டி சிவா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications