கதகளிக்காக வாழ்ந்து, கதகளி ஆடும்போதே மேடையில் உயிரை விட்ட மஹா கலைஞன் மடவூர் வாசுதேவன்
கதகளி நடனத்தின் தலைசிறந்த கலைஞனாக கருதப்படும் பத்ம பூஷண் மடவூர் வாசுதேவன் மேடையில் நடனமாடிக்கொண்டிருக்கும் போதே மரணமடைந்தார்
கொல்லம்: கதகளி நடனத்தில் புகழ் பெற்ற மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவரான மடவூர் வாசுதேவன் நாயர் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்
ஒவ்வொரு நாட்டியமும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் மக்களின் பழக்கவழக்கத்தையும் பிரதிபளிக்கும் என்பது மரபு. அந்த வகையில் முழுக்க முழுக்க உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நடனத்தின் சிறந்தத வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவது கதகளியாகும்.
கதகளி நடனத்தில் தலைசிறந்து விளங்கிய ஆசான் பத்ம பூஷண் மடவூர் வாசுதேவன் மேடையில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது மயக்கமடைந்தார். இதனால் பதறிப்போன நடனக்குழுவினரும் மக்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றநிலையில் மேடையிலேயே அவர் உயிர் போயிருந்தது. அவருக்கு வயது 88.

கதகளி மீது ஆசை
உலகளவில் கதகளி நடனத்தில் பிரபலமிக்க மடவூர் வாசுதேவன் நாயர், தனது 13வது வயதில் கேரளாவில் கதகளி நடனத்தை பயில தொடங்கினார். முகம் முழுவதும் பல வர்ணங்கள் பூசி, ஒப்பனை செய்து கொண்டு மற்ற நடனங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கதகளி நடனம் இருந்ததால் அதன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது

கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்
கொஞ்சம் கொஞ்சமாக கதகளியை நேசிக்க ஆரம்பித்த அவர், ஒருக்கட்டத்தில் கதகளியை சுவாசிக்க ஆரம்பித்தார். அதனால் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக சுலபமாக தத்ரூபமாக செய்ய ஆரம்பித்தார். ராவணன், துரியோதனன், கீசகன் மற்றும் கம்சன் ஆகிய புராண காலநாயகர்களின் வேடத்தினை வாசுதேவன் ஏற்றால் அன்று மேடை அதிரும்.

பத்மபூஷன் விருது
கதகளிக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தன் வாழ்நாளை சமர்ப்பித்த வாசுதேவனுக்கு 1997ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும் மற்றும் கலாமண்டலம் உள்ளிட்ட பிற விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல கடந்த 2011ம் ஆண்டு பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ராவணனாக வாசுதேவன்
அகஸ்தியகூடு மகாதேவ கோவிலில் நேற்றிரவு நடைபெற்ற ராமாயண நாடகத்தில் மகாதேவன் பங்கேற்றார். தனக்கு மிகவும் பிடித்த ராவணன் பாத்திரத்தை நாடகத்தில் ஏற்ற வாசுதேவன் மேடையே அதிரும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இரவு 10.40 மணியளவில் மேடையில் இருந்தபடியே நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

மேடையில் பிரிந்த உயிர்
நடனமாடிக்கொண்டிருக்கும் போது வாசுதேவன் மயக்கமடைந்தால் பதறிப்போன நடனக்குழுவினரும் மக்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிர் தான் நேசித்த மேடையிலேயே பிரிந்து விட்டதை தூக்கி சென்ற யாரும் உணரவில்லை. 13 வயதில் மேடையில் தொடங்கிய வாசுதேவனின் கதகளி வாழ்க்கை 88 வயதில் அதே மேடையிலேயே முடிந்தது. அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications