66வது குடியரசு தினம்... விஜயகாந்த், ஈவிகேஎஸ், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு, தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
66வது குடியரசு தின விழா நாளைக் கொண்டாடப் படவுள்ளது. இந்நிலையில், தமிழக கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடுவோம்:
அந்த வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தேர்தல் மூலம் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்ட மக்கள் அரசு தான் குடியாட்சி எனப்படுகிறது.
தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் இந்த நன்நாளில் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக தன்னுயிரை கொடுத்த தியாகிகளைப் போற்ற வேண்டும்.
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடுவோம் என சூளுரைத்து தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் சம உரிமை கிடைக்க சூளுரைப்போம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:-
ஜனவரி 26-ந்தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தியா குடியரசாகி உலகத்தின் மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வல்லரசாக உயர்ந்த இந்திய நாட்டில் வேற்றுமை சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, 120 கோடி மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்து உண்மையான குடியரசாக நமது நாடு விளங்கிட சூளுரை மேற்கொள்வோம்.
அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்றுவோம்:
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த லட்சக் கணக்கானவர்களின் தியாக வரலாறை போற்றும் தினமான இக்குடியரசு தினத்தில் நம்மண்ணில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கி, தேசமாந்தர் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழ்வதற்கு உறுதியேற்போம்.
விவசாயம், கல்வி, சுகா தாரம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறை களிலும் முழுமையான, நிறைவான வளர்ச்சி பெறவும், நாம் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்றவும் நாம் உறுதியேற்போம்.
ஒபாமாவின் வருகை... மோடியின் வெற்றி:
புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜனவரி 26-ந்தேதி இந்திய திருநாடு அனைத்து சட்ட திட்டங்களும் முறைமைபடுத்தப்பட்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளாகும். மக்களாட்சி தத்துவத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றிய பொன்னாள்.
பெருமை மிக்க நம் நாட்டின் இவ்வாண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக வருகை தருகின்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விழாவில் தான் கலந்து கொள்வதில் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலைவர்களுடன் நட்புறவு பாராட்டி, அவர்களின் நம்மதிப்பை பெறுவதில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகின்றார். ஒபாமாவின் இந்திய வருகை, மோடியின் அணுகுமுறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
பொருளாதார சமநிலை அடைய உறுதியேற்போம்:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் புதிய அரசியல மைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்த நாளை ஆண்டு தோறும் குடியரசு தின நாளாக கொண்டாடி வருகிறோம். நம்மை நாமே நமக்காக ஆளுகின்ற உரிமை தான் உண்மையான குடியரசாகும்.
மத நல்லிணக்கும், சகோதரத்துவம், சமத்துவ உணர்வோடும் அமைதி தொடர்ந்து நிலவிடவும் தேசபக்தி வளர்ந்திடவும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் கிடைக்கும் வகையில் பொருளாதார சமநிலையை அடைய இந்த குடியரசு தின நன்நாளில் உறுதியேற்போம்.
மேலும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications