சிறந்த காவல்நிலைய விருதை தட்டி வந்த ஆய்வாளர் ஜோதி... கோவையில் உற்சாக வரவேற்பு!
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருது வாங்கி வந்த கோவை ஆர்எஸ் புரம் ஆய்வாளர் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video

கோயம்புத்தூர் : நாட்டிலேயே சிறந்த காவல்நிலையம் என்று பெருமை பெற்ற கோவை ஆர் எஸ் புரம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜோதி விருது பெற்று காவல்நிலையம் வந்த போது அவருக்கு சக காவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட தேர்வில் தமிழகத்தில் இருந்து சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் மற்றும் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தகவலை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. இதில் கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் காவலர்கள் பெருமைப்பட முக்கிய காரணம் என்னவென்றால் ஆர்.எஸ்புரம் காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதல் இடம் பிடித்துள்ளது.

கான்பூரில் விருது வழங்கும் நிகழ்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலைய பெருமைபெற்றதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விருதினை வழங்கினார்.

ஆய்வாளர் ஜோதி விருது வாங்கினார்
கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி, கான்பூர் சென்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையில் இருந்து இந்த விருதை பெற்று கோவை திரும்பியுள்ளார். இன்று கையில் கோப்பையுடன் காவல் நிலையம் வந்த ஆய்வாளருக்கு சக காவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பூ தூவி வரவேற்பு
ஆய்வாளர் ஜோதி காவல் நிலையம் வந்ததும் வாசலிலேயே இரு மருங்கிலும் காவலர்கள் கூடி நின்று பூக்களை போட்டு வரவேற்றனர். ஆய்வாளர் ஜோதிக்கு உயர் காவல் அதிகாரி மாலை போட்டு வரவேற்றார்.

காவல் நிலையத்தில் பூ அலங்காரம்
நாட்டிலேயே சிறந்த காவல்நிலையம் என்ற பெருமைக்குரிய விருது பெற்று வந்துள்ள ஆய்வாளர் ஜோதியின் வருகையை முன்னிட்டு காவல் நிலையம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த காவல்நிலையத்தை சிறந்த காவல்நிலையமாக வைத்திருக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று ஆய்வாளர் ஜோதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications