யாருடன் த.மா.கா. கூட்டணி? ... ஏகமாக எதிர்பார்க்க வைத்து மறுபடியும் ஏமாற்றிய வாசன்!
சென்னை: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவித்துவிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். ஆனால் கூட்டணி குறித்து ஏப்ரல் மாதம்தான் அறிவிப்பேன்; யூகங்கள் எதற்குமே பதில் தரமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் வாசன்.
சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது த.மா.கா. அதிமுகவோ தமாகா வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும்; ஒற்றை இலக்க தொகுதிகள்தான் கொடுக்கப்படும் என கூறிவிட்டது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக, தமாகாவும் கூட்டணிக்கு வரட்டும் இரு கட்சிகளுக்கும் தலா 25 தொகுதிகள் தருகிறோம் எனக் கூறி வருகிறது. அதே நேரத்தில் தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி, தமாகா எங்கள் அணிக்கே வரும் என நம்பிக்கையோடு இருக்கிறது.

சின்னம் மட்டுமே அறிமுகம்
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவித்துவிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், தமது கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தியதுடன் சரி... கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த ஒரு யூகத்துக்கும் பதிலளிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார் வாசன்.
யூகத்துக்கு நோ பதில்
சென்னை செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்னமும் தங்களது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆகையால் தேர்தல் களநிலவரத்துக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவை அறிவிப்போம். அதுவரை கூட்டணி தொடர்பான யூகங்களுக்கு எந்த ஒரு பதிலையும் தர விரும்பவில்லை. கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ நிலையை மட்டுமே நான் அறிவிப்பேன்.
காங்கிரஸை பற்றி கவலை இல்லை
எங்களைப் பொறுத்தவரை த.மா.கா. என்பது பிராந்திய கட்சி; காங்கிரஸ் என்பது தேசிய கட்சி. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நாங்கள் வெகுதொலைவு வந்துவிட்டோம். ஆகையால் எந்த ஒரு கட்சியை சார்ந்தும் முன்வைத்தோ நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுக்கமாட்டோம். எங்கள் கட்சியின் நலன், மக்களின் நலனை முன்வைத்தே கூட்டணி குறித்து முடிவெடுப்போம். வரும் ஏப்ரல் மாதம்தான் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன்.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications