ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்யவில்லை: கலாநிதி மாறன் மறுப்பு
சென்னை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முழுமையாக வரி செலுத்திய பிறகும் அந்நிறுவனத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தம் மீது வழக்கு தொடர்வதில் உள்நோக்கம் இருப்பதாக சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த பல ஆண்டுகளாக நானும், என்னைச் சார்ந்த சன் குழும நிறுவனங்களும் ஆண்டு தோறும் ரூ.600 கோடிக்கும் அதிக மாக வருமான வரி செலுத்தி வருகிறோம். அதிக அளவில் தானாக முன்வந்து வரி செலுத்தியதற்காக வும், வருமான வரித் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காவும் 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சன் குழுமத்துக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ள தாகவும், அது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்து அதற்காக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
2014-15-ம் ஆண்டுக்கான வரி கள் அனைத்தும் 2015 பிப்ரவரிக்குள் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாக ‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தாமத மாக வரி செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினருடன் பேசி கால அவகாசம் பெற்று வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
‘ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தில் நான் அன்றாட நிர்வாகப் பொறுப் பில் இல்லாத தலைவராக இருந் தேன். அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தலைவர், ஒரு நிறு வனத்தின் கணக்கு - வழக்குகள், வரி செலுத்துதல் போன்ற அன்றாட அலுவல்களில் ஈடுபட மாட்டார் என்பது விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.
ஆனால், வரி முழுமையாக செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கு தொடர்ந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. சமீபகாலமாக அரசின் சில துறைகள், எனக்கும் என்னைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் எதிராக செயல்பட முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பலவிதமான அவதூறு செய்தி களை பத்திரிகைகளில் வெளி யிட்டு சன் குழுமத்தின் புகழை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். யாரை திருப்திப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.
சன் குழுமத்துக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர் கொள்வேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications