ஊட்டியில் கோரமான 5 சடலங்கள்.. விலங்குகளின் உறுமல்.. சோறு-தண்ணீரின்றி இரு நாட்கள் அவதிப்பட்ட இருவர்!
Recommended Video

ஊட்டி: ஊட்டியில் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் கோரமாக சிதிலமடைந்த சடலங்களுடன் உணவு, தண்ணீரின்றி தவித்ததாக கூறப்படுகிறது.
ஊட்டியில் உள்ள மசினக்குடிக்கு சென்னையை சேர்ந்த ராம ராஜேஷ் (36), இப்ராகிம் (35), அருண் (36), வழக்கறிஞர் ரவி வர்மா (39), ஜெயக்குமார் (36), அமர்நாத் (35),தூத்துக்குடியை சேர்ந்த கப்பல் கேப்டன் ஜூட் ஆன்டோ கெவின் (34) ஆகியோர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

300 அடி பள்ளம்
இவர்கள் கடந்த 30-ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். பின்னர் 1-ஆம் தேதி காரை எடுத்துக் கொண்டு மசினகுடி காட்டு பகுதிக்கு சென்றனர். அப்போது கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் 35-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஊட்டி போலீஸுக்கு தகவல்
இதனிடையே 2-ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றவர்களை காணாது அவர்களது உறவினர்கள் பதறினர். செல்போனும் வேலை செய்யாத நிலையில் சந்தேகமடைந்து ஊட்டி காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

சென்னையிலிருந்து வந்தவர்கள்
இதையடுத்து போலீஸாரும் வனத்துறையினரும் தேடினர். அப்போது கல்லட்டி பகுதியில் 300 அடி ஆழத்தில் கார் ஒன்று கிடந்தது. அருகே சென்று பார்த்த போது இருவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. மேலும் உறவினர்கள் பதறிய படி விபத்தில் சிக்கியவர்கள் சென்னையிலிருந்து வந்தவர்கள்தான் என தெரிந்தது.

தண்ணீர் இல்லை
காயமடைந்த ராம் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களாக கோரமாக காட்சியளித்த 5 சடலங்களுடன் குத்துயிரும் கொலை உயிருமாக இருந்துள்ளனர். விலங்குகள் எழுப்பும் உறுமல் சப்தங்களும் இவர்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் இவர்கள் உண்ண உணவும், தண்ணீரும் இன்றி உயிருடன் இருந்தது நிச்சயம் தெய்வாதீனம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications