ரூ.10,000 கோடி செலவு.. 20,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. சேலம் 8 வழி சாலையால் என்ன பிரச்சனை?
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலை காரணமாக மொத்தம் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட உள்ளது. மொத்தமாக அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களின் கைவிட்டு போக உள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது.

சாலை
இந்த 8 வழி சாலை சென்னையில் இருந்து சேலம் வரை போடப்படுகிறது. இதில் எதிர்புறத்தில் நான்கு வாகனமும், அதற்கு எதிர் புறத்தில் 4 வாகனமும் வரும் வகையில் மிகவும் பெரிய அளவில் சாலை போடப்பட உள்ளது. இந்த சாலைக்காக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. மொத்தம் 274 கிமீ தூரத்துக்கு சாலை போடப்பட உள்ளது.

பகுதிகள்
சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னைக்கு சேலத்தில் இருந்து மிக விரைவாக சென்று சேர முடியும். ஆனால் இந்த சாலை முழுக்க முழுக்க விவசாய நிலங்களிலும், சில குடியிருப்பு பகுதிகளிலும் போடப்பட உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மொத்த விவசாய நிலம்
மொத்தம் இதற்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. குடியிருப்பு நிலங்களும் கணிசமான அளவில் கையகப்படுத்தப்பட உள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் பெரும்பாலான கிராமங்கள் இதனால் பாதிக்கப்படும். சேலத்தில் மட்டும் பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் மொத்தமாக விவசாய நிலங்கள் இதனால் அழிந்து போகும்.

ஏற்கனவே
சேலத்தில் ஏற்கனவே நாற்கர சாலை சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த சாலையிலேயே இதுவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இல்லை. ஆனால் தற்போது தேவையில்லாமல், 8 வழி சாலை போடப்படுகிறது. இந்த சாலைக்கு எதிராக போராடும் சேலம் மக்களை போலீஸ் இரவோடு இரவாக கைது செய்து வருகிறது. இந்த சாலை திட்டம், விவசாய மக்களின் வாழ்வை அடியோடு பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications